Close
செப்டம்பர் 20, 2024 4:02 காலை

அங்கன்வாடி ஊழியர்களுக்கு புதிய செல்போன் வழங்க கோரிக்கை

புதுக்கோட்டை

கூட்டத்தில் பேசுகிறார் மாநில பொருளாளர் எஸ்.தேவமணி

அங்கன்வாடி ஊழியர்கள் அனைவருக்கும் உடனடியாக புதிய செல்போன் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட பேரவை கூட்டம் எம்.விஜயலட்சுமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் டி.பத்மா கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
மாநாட்டை வாழ்த்தி சிஐடியு மாவட்ட தலைவர் கே.முகமது அலி ஜின்னா, பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். சிஐடியு மாவட்ட செயலாளர் ஏ. ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.தேவமணி நிறைவுரையாற்றினார்.
மாவட்ட தலைவராக எம்.விஜயலட்சுமி, செயலாளராக ஏ.சி.செல்வி, பொருளாளராக எஸ். சவுரியம்மாள் மாநில செயற்குழு உறுப்பினராக கே.எம்.ரேவதி உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். கே.எம்.ரேவதி நன்றி கூறினார்.
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக அறிவித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒட்டுமொத்த பணிக்கொடை யாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.10,00,000, உதவியாளர்க ளுக்கு ரூ.5,00,000 வழங்க வேண்டும்.
ஏற்கெனவே வழங்கப்பட்ட செல்போன்களின் காலம் காலாவதியாகி விட்டதால் அனைத்து அங்கன்வாடி ஊழியர்களுக்கும் புதிய செல்போன்களை வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top