Close
செப்டம்பர் 19, 2024 11:04 மணி

உள்ளாட்சித் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதுக்கோட்டையில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்ட சிஐடியு தொழிலாளர்கள்

உள்ளாட்சித் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதுக்கோட்டையில்  சிஐடியு தொழில் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளாட்சித் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித் தொழிலாளர் சங்கம்(சிஐடியு) சார்பில் திங்கள்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் க.முகமதலிஜின்னா தலைமை வகித்தார்.

சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சி.அன்புமணவாளன், துணைச் செயலாளர் சி.மாரிக்கண்ணு, ஒருங்கிணைப்பாளர் சி.முத்தையா உள்ளிட்டோர் பேசினர்.
கோரிக்கைகள்: ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசு அறிவித்துள்ள படி குறைந்தபட்ச ஊதியம் ரூ.600 வழங்க வேண்டும். மாதம் 5-ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். தொழிலாளர் களிடம் பிடித்தம் செய்துள்ள வருங்கால வைப்புநிதி மற்றும் கூட்டுறவு சங்கத்திற்காக பிடித்தம் செய்துள்ள தொகைகளை தாமதமின்றி வழங்க வேண்டும்.

தீபாவளி முன்பணமாக நிரந்தர ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம், ஒப்பந்த ஊழியர்களுக் கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்துத்தரப்பு முன்களப் பணியாளர்களுக்கும் அரசு அறிவித்துள்ள ஊக்கத்தொகை ரூ.15- லட்சத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

நகராட்சியில் பயன்படுத்தப்படும் தள்ளுவண்டி மற்றும் பேட்டரி வண்டியை பழுதுநீக்கித் தருவதோடு, தரமான வண்டிகளை கூடுதலாக வழங்க வேண்டும். கிருமி நாசினி, முகக்கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை கூடுதலாக வழங்க வேண்டும்.

ஒப்பந்தத் தொழிலார்கள் பேராடிப்பெற்ற வாரவிடுப்பு, விழாக்கால விடுப்புகளை அமுல்படுத்த வேண்டும். குப்பைகளைப் பிரிப்பதற்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top