Close
செப்டம்பர் 20, 2024 1:26 காலை

பள்ளியின் அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தல் ஆணையை காலதாமதம் இன்றி வழங்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கே எம் திருமணமஹாலில் ஆலோசனைகூட்டம் அஷ்ரப் அன்சாரி தலைமையில் நடந்தது

புதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு
ஆலோசனை கூட்டம் நடந்தது.
புதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கே எம் திருமணமஹாலில் ஆலோசனைகூட்டம் அஷ்ரப் அன்சாரி தலைமையில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ரமணன் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.
பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தனியார் பள்ளிகளுக்கு என தனியாக மாவட்ட கல்வி அலுவலர் ஏற்படுத்திக் கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது.
பள்ளியின் அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தல் ஆணையை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும்.
டிடிசிபி ஆணை பெறுவதில் இருந்து நர்சரி பள்ளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும். அனுமதி கோரி விண்ணப்பித் துள்ள பள்ளிகளுக்கு உடனே ஆணை வழங்க வேண்டும். ஆர்டிஇ -கல்விக் கட்டணத்தை   கடந்த கல்வியாண்டு மற்றும் இந்த கல்வி ஆண்டிற்கு சேர்த்து உடனடியாக வழங்க வேண்டும்.
கல்வி கட்டண நிர்ணயக் குழு காலதாமதம் இன்றி  வகையில் கட்டணத்தை நிர்ணயம் செய்து உடனடியாக அறிவிக்க வேண்டும்.
வட்டாட்சியர் அலுவலகம் பொது சுகாதாரம் மற்றும் நகராட்சி தீயணைப்பு மீட்புத்துறை இருந்து சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் பொழுது ஆய்வு செய்து உடனடியாக வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில்  தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை  அமைப்புச் செயலாளர் லண்டன் லுக் கிருஷ்ணமூர்த்தி ஒருங்கிணைத்தார் முன்னதாக செயலாளர் முத்து கருப்பன் வரவேற்றார். பொருளாளர் மேசியா சந்தோசம் நன்றி கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top