Close
செப்டம்பர் 20, 2024 3:36 காலை

புதுக்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நகராட்சி அலுவலர்கள்

நகராட்சி அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சி, மாநகராட்சி பேரூராட்சிகளில், பணிபுரியக்கூடிய கடைநிலை ஊழியர் களை பாதிக்கக்கூடியவகையில் தமிழக அரசு புதிதாக வெளியிட்ட அரசாணை எண் 152-ஐ மறுபரிசீலனை செய்ய வேண்டும், மாநகராட்சி, நகராட்சிகளில் “டி” பிரிவு பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும், ஏற்கெனவே “டி” பிரிவு பணியாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

ஒப்பந்த பணியாளர்கள் அவுட்சோர்சிங் முறையில்  தனியார் இடம் ஒப்படைக்கும் முடிவை கண்டித்து புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பாக  ஊழியர்கள் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டை தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  ஊழியர்கள் இணைந்து நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான ஊழியர்கள்  பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top