Close
செப்டம்பர் 19, 2024 11:12 மணி

மழைக்காலத்தில் வேலை இழப்பு ஏற்படும் நாட்களுக்கு நிவாரணம் வழங்க ஏஐடியுசி கோரிக்கைம்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற ஏ ஐ டி யு சி தொழிலாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட நிர்வாக குழு கூட்டம் 

மழைக்காலத்தில் வேலை இழப்பு ஏற்படும் நாட்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென  ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கட்டுமா ன ஏ ஐ டி யு சி தொழிலாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட நிர்வாக குழு கூட்டம்  தஞ்சாவூர் மாவட்ட அலுவலகத் தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத் தலைவர் ஆர்.சேகர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர். தில்லைவனம் நடைபெற்றுள்ள பணிகள் குறித்து பேசினார். கூட்டத்தில் பொருளாளர் உ.சௌந்தர்ராஜன், துணைச் செயலாளர் சீனி.சுகுமாரன், துணைத் தலைவர்கள் மு.ராமையன், எம்.சிகப்பியம்மாள், ஜெ.பாலசுப்பிர மணியன், எஸ். ரங்கசாமி, குமார் வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட துணைச்செயலாளர் பி.செல்வம் நன்றி கூறினார்.

 நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  கட்டுமான தொழிலாளர் களுக்கு தற்போது வழங்கப்படும் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயை தற்போதுள்ள விலைவாசி உயர்வுகளுக்கு ஏற்ப ரூபாய் 6000 மாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.

பணியின் போது விபத்து ஏற்பட்டால் சிகிச்சைக்குரிய மருத்துவ செலவுகளை முழுமையாக வழங்க வேண்டும், மழைக்காலத்தில் வேலை இழக்கும் நாட்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், மணல், சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top