Close
செப்டம்பர் 20, 2024 5:46 காலை

பேருந்து வசதி கோரி புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தினர் மனு

புதுக்கோட்டை

போக்குவரத்துக்கழக பொது மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்த சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க நிர்வாகிகள்

பேருந்து வசதி செய்து தரக்கோரி புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக மனு அளிக்கப்பட்டது.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் மாருதி கண.மோகன்ராஜா தலைமையில் நிர்வாகிகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் க. குணசேகர னை நேரில்  சந்தித்து  அளித்த கோரிக்கை மனு விவரம்:

புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பேருந்து கட்டண உயர்வையும் சாமானிய மக்களின் இயலாமையை கருத்தில் கொண்டு புதுக்கோட்டை நகரில் இருந்து சென்னைக்கு சொகுசு பேருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக பஸ் வசதி செய்து தர வேண்டும்.

மேலும் பெங்களூர், கொடைக்கானல், வேலூர் போன்ற ஊர்களுக்கு பேருந்து போக்குவரத்து தேவை உள்ளது.  புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு ரயில் வரும் போது சரியான நேரத்திற்கு பஸ்களை இயக்க  வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது.

கோரிக்கை அடங்கிய மனுவை பெற்றுக்கொண்ட பொது மேலாளர் அகை  பரிசீலித்து செய்து  உரிய நடவடிக்கை எடுப்பதாக நிர்வாகிகளிடம் தெரிவித்தார். இந்நிகழ்வில், சங்கச் செயலாளர்இப்ராஹிம் பாபு, திட்டத் தலைவர் .ராஜா முஹம்மது, துணைச் செயலாளர்கள் .முகமது அப்துல்லா, பாரூக் ஜெய்லானி மற்றும் சையது முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top