Close
செப்டம்பர் 20, 2024 4:09 காலை

அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களை நியமிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

அன்னவாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர்

அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர் களை நியமிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கக்கோரி பொதுமக்களின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அன்னவாசல் அரசு மருத்துவமனை எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.ஜோஷி தலைமை வகித்தார். பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகளான ஏ.முகமது அப்துல் கரீம், பி.தர்மலிங்கம், ஏ.பி.ஆறுமுகம், மு.மீராமொய்தீன், சி.நடேசன், எம்.சி.லோகநாதன் உள்ளிட்டோர் பேசினர்.

கடந்த 26.09.2023 அன்று இலுப்பூர் வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் ஒருமாதத்திற்குள் அன்னவாசல் பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் என உறுதியளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும்,

அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கக்கோரியும், வாரச் சந்தை கடைகளுக்கு உடனடியாக மின்விளக்குகள் அமைத்துத்தரக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top