Close
செப்டம்பர் 20, 2024 4:11 காலை

மதுரையில் பலத்த மழை குளம் போல மாறிய சாலைகள்…

மதுரை

மதுரை மேலமடை சௌபாக்கிய விநாயகர் கோவில் தெருவில், மிகவும் மோசமாக உள்ள சாலைகள்

மதுரையில் பலத்த மழை குளம் போல மாறிய சாலைகளால் மக்கள் அவதி.

மதுரை நகரில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் ,மதுரை நகரில் மேலமடை, கோமதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல சாலைகள் குளம் போல காட்சியாக இருப்பதுடன், சேறும், சகதியுமாக அதிகமாக தென்படுகிறது.

இதனால், அவர் வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன செல்வோர், மிகவும் அவதி அடைந்துள்ளனர் . கடந்த
சில நாட்களுக்கு முன்பு, பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழிகளும் பல இடங்களில் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளதாம்.

மதுரை மேலமடை சௌபாக்கிய விநாயகர் கோவில் தெருவில், சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. இதுகுறித்து, மதுரை மாநகராட்சி உதவி ஆணையிடும் பொது மக்கள் புகார் தெரிவித்தும், சாலையில் செப்பனிட ஆர்வம் காட்டவில்லையென கூறப்படுகிறது.

இது தொடர்பாக, சமூக ஆர்வலர்கள்  மதுரை நகரில் உள்ள மோசமான சாலைகளை, மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் தனிக் கவனம் செலுத்தி சாலையை செப்பனிட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top