Close
செப்டம்பர் 20, 2024 6:45 காலை

புதுக்கோட்டையில்  மத்திய மாநில எஸ்சி-எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு ஆலோசனை

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் மத்திய மாநில எஸ்சி எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் மக்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

புதுக்கோட்டையில்  மத்திய மாநில எஸ்சி -எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு   மற்றும் மக்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்  நடந்தது.
புதுக்கோட்டையில்  மத்திய மாநில எஸ்சி -எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு   மற்றும் மக்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் 26.02.2023-ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை டிஎஸ்எம்எஸ் கூட்ட  ஹாலில்  நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு  மத்திய மாநில எஸ்சி எஸ்டி அரசு ஊழியர் மற்றும் மக்கள் கூட்டமைப்பினுடைய தலைவர் எஸ். கருப்பையா  தலைமை வகித்தார்.  மாநில பொருளாளர் சோலைமலை முன்னிலை வைத்தார்.  தலைவர்      தீர்மானங் கள் முன்மொழிந்தார்.
புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி   பட்டியல் இன   சமூக பேராசிரியர் காயத்ரி தேவிக்கு  கல்லூரி நிர்வாகத்தால் இழைக்கப்பட்ட அநீதிகளை கண்டித்தும்,  இதற்கு காரணமானவர்கள் மீது திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக நிர்வாகம்  நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும் வருகிற 11.3.2023 அன்று மாலை 4 மணி அளவில் புதுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இதில்,   மதுரை காமராஜர் பல்கலைக்கழக வரலாற்று துறை பேராசிரியர்   நாகூர்கனி,   பேராசிரியர்   கருப்பசாமி,   பால் வளப்பிரிவு தலைவர்  ஆவின் ராஜா ,மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி,   மாநில மகளிர் அணி தலைவர் மகேஸ்வரி,  பேராசிரியர் காயத்ரிதேவி  உள்ளிட்டோர் பேசினர்.
இதில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து   மத்திய, மாநில எஸ்சி ,எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு   மற்றும் மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top