Close
செப்டம்பர் 20, 2024 3:32 காலை

அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக்கோரிக்கை

புதுக்கோட்டை

கூட்டத்தில் பேசுகிறார் மண்டலப் பொதுச் செயலாளர் இளங்கோவன்

அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டுமென போக்குவரத்து ஓய்வூதியர்கள் கோரிக்கை

அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டுமென அரசுப் போக்குவரத்து ஓய்வூதியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் புதுக்கோட்டை மண்டல 4-ஆம் ஆண்டுப் பேரவை செவ்வாய்க்கிழமை பதுக்கோட்டையில் நடைபெற்றது. மூத்த தோழர் எஸ்.பெருமாள் கொடியேற்றினார். உதவித் தலைவர் எஸ்.ஆறுமுகம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில துணை பொதுச் செயலாளர் தொடக்கவுரையாற்றினார்.

மாநில துணை பொதுச் செயலாளர் ஆர்.தேவராஜ், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.முத்தையா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மண்டல பொதுச் செயலாளர் எஸ்.இளங்கோவன், பொருளாளர் எம்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் அறிக்கைகள் சமர்ப்பித்தனர். மாநில பொதுச் செயலாளர் கே.கர்சன் நிறைவுரையாற்றினார். ஜேஎஸ்ஆர்.வின்சென்ட் நன்றி கூறினர்.

அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியர்களின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதி ஒதுக்கீடு செய்து அரசே ஓய்வூதியத் திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top