Close
செப்டம்பர் 20, 2024 4:05 காலை

போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

தனியார்மயமாக்கும் முடிவைக்கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழில் சங்கத்தினர்

போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்தும். காலி பணியிடங்களில் நிரந்தர பணி அடிப்படையில் புதிய நியமனங்கள் செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோழிகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்ககளின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது.

போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், காலி பணியிடங்களில் நிரந்தரப் பணி அடிப்படையில் புதிய நியமனங்கள் செய்திட வேண்டும், ஹவுஸ் சோர்சிங் முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை  அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு நடைபெற்றது. இதில் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்  200 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து  முழக்கங்கள்  எழுப்பினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top