Close
செப்டம்பர் 20, 2024 1:36 காலை

35 ஆண்டுகளாக குடியிருக்கும் காலனி வீடுகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த இரும்பாநாடு கிராம மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் இரும்பாநாடு 35 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் பட்டியல் இன மக்களின் காலனி வீடுகளுக்கு மனைப்பட்ட வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தினர்.

இதுகுறித்து இரும்பாநாடு பட்டியல் இன மக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் வே.வீரையா ஆகியோர் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பது:

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, அரிமளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இரும்பாநாடு கிராமத்தில்  நாங்கள்  வசித்து வருகிறோம். எங்களுக்கு கடந்த 1987-ஆம் ஆண்டு இந்திராகாந்தி கூட்டுக் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 20 காலனி வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது.

இந்த வீட்டிற்கான வீட்டுவரி, மின் கட்டனங்களை தொடர்ந்து செலுத்தி வருகிறோம். இந்த வீட்டு முகவரியில் தான் எங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் பெற்றுள்ளோம்.

மேற்படி நாங்கள் வசிக்கும் காலனி வீடுகளுக்கு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி கடந்த 2004-ஆண்டு முதல் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனுக்கொடுத்து வலியுறுத்தி வருகிறோம். இதுநாள் வரை எங்களுக்கு மனைப்பட்டா வழங்கப்பட வில்லை. இந்நிலையில் நாங்கள் குடியிருக்கும் வீட்டுமனைக் கான இடம் தற்பொழுது வேறொரு தனிநபரின் பெயரில் பட்டா ஏற்பட்டுள்ளது.

மேற்படி வேறொரு தனிநபரின் பட்டாவை உடனடியாக ரத்து செய்வதோடு 35 ஆண்டுகளாக குடியிருந்து வரும் எங்களின் பெயரில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பட்டா வழங்க வேண்டுமென அந்த மனுவில் தெரிவிக்கப்பட் டிருந்தது. மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top