Close
செப்டம்பர் 19, 2024 11:19 மணி

அடிப்படை வசதிகள் கோரி நமணசமுத்திரத்தில் சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

கோரிக்கைகளை வலியுறுத்தி நமனசமுத்திரத்தில் சிபிஎம் கட்சியினர் போராட்டம்

புதுக்கோட்டை அடுத்த தேக்காட்டூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாய்க்கிழமை நமணசமுத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி மன்ற உறுப்பினர் கே.வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன் சிறபுரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சு.மதியழகன், அரிமளம் ஒன்றியச் செயலாளர் ஆர்.வி.ராமையா ஒன்றிய குழு உறுப்பினர்கள் எம்.அடைக்கப்பன், ஏ.மணி, கிளைச் செயலாளர் கே.சக்திவேல் ஆகியோர் பேசினர்.
நமுணை-தேக்காட்டூர் சாலையை உடனடியாக செப்பனிட வேண்டும். நமுனசமுத்திரம் ரயில் நிலையத்தில்  அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தேக்காட்டூர் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்த வேண்டும்.
நமுணையில் உள்ள அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியை அரசே ஏற்று மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும். மேல தேமுத்துப்பட்டியில் ஆக்கிரமிப்பில் உள்ள இனாம் நிலங்களை மீட்டு சாகுபடி செய்த விவசாயிகளிடமே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top