Close
செப்டம்பர் 20, 2024 3:36 காலை

பணிநிரந்தரம் கோரி சிறப்பாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறப்பாசிரியர்கள்.

பணி நிரந்தரம் செய்யக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழகப் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெ. பழனிவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பா. தர்மராஜ், பொருளாளர் பூ. பழனிசாமி, மகளிர் அணித் தலைவர் வீ. ஜமுனாராணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினர்.
கோரிக்கைகள்: சுமார் 13 ஆண்டுகளாக பள்ளிக் கல்வித் துறையில் உடற்கல்வி, கணினி, இசை, ஓவியம், தோட்டக்கலை, கட்டடக் கலை, வாழ்வியல் திறன்கள் ஆகிய பாடங்களுக்கு பகுதிநேர சிறப்பாசிரியர்கள் 12,200 பேர் பணியாற்றி வருகின்றனர்.
மாதந்தோறும் வெறும் ரூ. 10 ஆயிரம் மட்டுமே பெற்றுக் கொண்டு இந்தப் பாடங்களை எடுத்து வரும் சிறப்பாசிரியர் கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை  வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top