Close
ஜூலை 4, 2024 5:30 மணி

கருப்பு தீபாவளி: ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர்

கோரிக்கையை நிறைவேற்றாத மாநில அரசைக் கண்டித்து ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் திங்கள்கிழமை புதுக்கோட்டையில் கருப்பு தீபாவளி – கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போக்குவரத்து ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு வரும் தீபாவளிக்கு முன்பாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. ஆனால், கொடுத்த வாக்குறுதிப்படி தீபாவளிக்கு முன்பாக அகவிலைப்படி உயர்வு வழங்க அரசும், போக்குவரத்துக் கழமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய அரசைக் கண்டித்து ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் வெள்ளிக்கிழமை மாநில முழுவதும் கருப்பு தீபாவளி  கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்து பணிமனை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு புதுக்கோட்டை மண்டலத் தலைவர் பி.லோகநாபதன் தலைமை வகித்தார்.

பொதுச் செயலாளர் எஸ்.இளங்கோவன் கண்டன உரையாற்றினார். சிஐடியு மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் போராட்டத்தை ஆதரித்துப் பேசினார். கோரிக்கைகளை விளக்கி நிர்வாகிகள் அய்யாத்துரை, சின்னச்சாமி, ஆறுமுகம் உள்ளிட்டோர் பேசினர். பொருளாளர் எம்.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top