Close
ஜூலை 8, 2024 1:13 மணி

காரடைக்கன்பட்டியில் டாஸ்மாக்கடை அமையக்கூடாது ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை

மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே காரடைக்கன் பட்டியில் அரசு மதுபானக்கடை அமைக்கக்கூடாது என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, இராஜாளிப் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காரடைக்கன்பட்டி கிராமத்தினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், கே.சண்முகம், ஒன்றியச் செயலாளர் என்.மகாலிங்கம் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:

எங்கள் கிராமத்தில் அரசு மதுபானக்கடை (டாஸ்மாக்) அமைய உள்ளதாக அறிகிறோம். இந்தக் கடை அமைய உள்ள இடத்திற்கு அருகிலேயே அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தக் கடை வழியகாத்தான் தினந்தோறும் நூற்றுக்கணக் கான மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் பயணித்து வருகின்றனர்.

இங்கு டாஸ்மாக் கடை அமைந்தால் பள்ளி மாணவ, மாணவி களுக்கும், பொதுமக்களுக்கும் கடுமையான சிரமம் ஏற்படும். மேலும், மாணவர்கள் குடிநோய்க்கு ஆளாகும் சூழலும் உருவாகிவிடும். எனவே, மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இங்கு டாஸ்மாக் கடை அமைவதை தடுத்து நிறுத்த  வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top