Close
செப்டம்பர் 20, 2024 3:54 காலை

கடந்த 3 ஆண்டுகளாக தோற்கடிக்கப்படும் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு நியாயம் கிடைக்குமா

புதுக்கோட்டை

ஆசிரியர் சங்கமம் நிறுவனர் சிகரம் சதிஷ்குமார்

கடந்த 3 ஆண்டுகளாக தோற்கடிக்கப்படும் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு நியாயம் வழங்க வேண்டும்
கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக  கல்வியாளர்கள் சங்கமம் நிறுவனர் சிகரம்சதிஷ்குமார் வெளியிட்ட அறிக்கை:  நீட் தகுதித் தேர்வில் தோல்வி அடைவது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தோல்வி அடைவதெல்லாம் அறியாத பாடத்திட்டம்,புரியாத பாடத்திட்டம் எனச் சொல்லி, தோல்வியை நியாயப்படுத்திப்  பார்க்கத் தொடங்கிவிட்டோம்.

ஆனால், தாங்கள் இரண்டு ஆண்டுகளாகப் படித்து, நல்ல முறையில் தேர்வு எழுதிய, எழுதுகின்றதேர்வுகளி லேயே கடந்த 3 ஆண்டுகளாகத் தோற்கடிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசின் கீழ் பயின்ற, பயிலும் ஆசிரியர் பயிற்சி மாணவ, மாணவிள்.

தனியார் பயிற்சி நிறுவனங்களில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் சேர்ந்திருந்தாலும், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 12 ம் வகுப்பில்அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே சேர முடியும்.ஆனால் அங்கு பயில்பவர் களுக்கும் அறிவே இல்லாதது போல கடந்த 3 ஆண்டுகளாக தேர்வுமுடிகள்1 முதல் 5 சதவீத தேர்ச்சிகளுக்குள்ளாகவே வந்து கொண்டிருக்கின்றன.

அதற்கு முந்தைய ஆண்டுகளிளெல்லாம் 60 முதல் 75 சதவீதம் வரை வந்துகொண்டிருந்த தேர்வுமுடிகள் திடீரென ஒரே ஆண்டில் குறைந்து அதிலிருந்து அதிலிருந்து அடுத்த 3 ஆண்டுகளுக்கும் 5% குள்ளாகவே இருக்கின்றது எனச் சொன்னால் , இதில் மிகவும் ஆராயப்பட வேண்டிய வேறு ஏதோ பிரச்னை இருக்கின்றது என்பதை நாம் உணர வேண்டியிருக்கிறது.

விவரம் என்னவென்று பலதரப்பிலும் விசாரித்துப் பார்த்ததில்,
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணிபுரியும் விரிவுரை யாளர்களைப் பழிவாங்கும் பொருட்டு மாணவர்களைத் தோல்வி அடைய வைக்கும் படலம்  மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கியிருப்பதை அறிய முடிகின்றது.

விரிவுரையாளர்கள் தவறாக விடைத்தாட்கள் திருத்தியே மாணவர்கள் இதுவரை தேர்ச்சி அடைந்துள்ளனர். என்பதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, தமிழ்நாட்டில் பணிபுரி யும் மொத்த விரிவுரையாளர்களில் 300 பேருக்கு மேல் கலந்து கொண்ட விடைத்தாள் திருத்தும் முகாமில் 181 நபர்களுக்கு மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது கடந்த கால அரசுத் தேர்வுத்துறை. இது ஏறக்குறைய 60% க்கும் அதிகமான
விழுக்காடாகும்.

விடைத்தாள் திருத்துவதில் ஓரிருவர் தவறு செய்ய முடியும். ஆனால் ஒரு மொத்த நபர்களும் தவறு செய்துள்ளனர் எனக் கருதுவதென்பது பழிவாங்குவதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆயுதமாகவே கண்கூடாக உணர முடிகின்றது.ஆனால்  பாவம் இதில் எதிர்காலத்தை இழந்து நிற்பது பெருங்கனவோடு  ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படித்த, படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவியர்.

விரிவுரையாளர்கள் மோசடியில் ஈடுபட இது ஒன்றும் பணிவாய்ப்பு வழங்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு அல்ல. என்பதையும் இங்கே நாம் கவனிக்க வேண்டியிருக்கின்றது. இது ஓர் ஆண்டு இறுதித்தேர்வு மட்டுமே ஆகும்.ஆனால் அதனையே மூன்று ஆண்டுகளாக எழுதி ,எழுதி களைத்துப் போயிருக்கின்றனர்.தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள
15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி மாணவர்கள்.

ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கு வளநூல் என்கிற வகையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மாறாத பாடத் திட்டத்தை வைத்து பாடம் நடத்திவருவதோடு,Answer Key Book  ஒன்றை வழங்கி அதில் இருந்து ஒரு வார்த்தை மாறினாலும் மதிப்பெண்வழங்கக்கூடாது.ஆசிரியருடைய கற்பித்தலையும், கற்பித்தல் முறையும் இப்படித்தான் இருக்க வேண்டும் என எவரும் வரையறுத்துவிட முடியாது.

அது கல்வி உளவியல் மற்றும் புதுமை புனைதலின் அடிப்படையில் தனியரின் திறமையடிப்படையில் மாறுபடும்.
ஆனால் திருத்தும் முறையில் குறையும், திருத்துபவருக்கு தண்டணையும் கொடுத்து ஆசிரியர் பயிற்சி மாணவர்களின் எதிர்காலத்தின் மீது பெரும்தாக்குதலை அரசுத் தேர்வுகள் துறை நடத்திக்கொண்டிருப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு வரை சரியாகச் சென்று கொண்டிருந்த மதிப்பீட்டில் 3 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து மட்டும் ஏன் பிரச்சினை என விசாரித்தால்,விடைத்தாள் திருத்தும் மையத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்ட பணப்பலன் சார்ந்த பிரச்னையின்  காரணமாக,
ஆசிரியர்பயிற்சிநிறுவனவிரிவுரையாளர்களைபழிவாங்குகின்றேன் என்னும் பெயரில் ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்களைத் தொடர்ந்து தோல்வி அடையச் செய்து, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையிலும் மண் அள்ளிப் போட்டுவிட்டது கடந்த கால அரசுத் தேர்வுகள் துறை. ஆனால் அது இன்னமும் நீடித்துக்கொண்டிருப்பது பெரும் சோதனை மட்டுமல்ல வேதனை..

வருங்காலத் தலைமுறையை வளமான தலைமுறையாக மாற்றும் வல்லமை படைத்த ஆசிரியர் பயிற்சி மாணவர் களுக்கும், ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்களுக் கும் விடிய வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top