Close
செப்டம்பர் 20, 2024 3:54 காலை

புதுக்கோட்டை அருகே பேருந்து மேற்கூரையில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்…

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே ஆலங்குடி பகுதியில் பேருந்தில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை அருகே  உயிரை பணயம் வைத்து பேருந்தின் மேற்கூரையிலும் படிக்கட்டுகளிலும் தொங்கிச் செல்லும் மாணவர்களின் நிலை குறித்து பெற்றோர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதனால் பேருந்துகளில் தினம்தோறும் பல லட்சம் பேர் இலவசமாக பெண்கள் பயணம் செய்து வருகின்றனர்.

 புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் பள்ளி வேலை நாட்களில் காலை மாலை வேலையில் அதிக அளவில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயங்காத காரணத்தினால்,  ஒருசில தனியார் பேருந்துகளில் ஆலங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் இல்லாத காரணத்தினால் ஒரே பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டும் மேற்கூரையில் ஏறி கொண்டு பேருந்தில் செல்கின்றனர்.

பேருந்து  பற்றாக்குறையாக இருப்பதால்  உரிய நேரத்தில் திரும்ப வேண்டிய சூழலில்  கிடைக்கும் பேருந்துகளில் பள்ளி மாணவ மாணவிகள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டும் மேற்கூரையில் ஏறி பயணம் செய்வதால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.

எனவே தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் உடனடியாக பள்ளி வேலை நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ, மாணவிகள் செல்லும்  வகையில்  கூடுதல்  பேருந்து களை கிராமப்புறங்களில் இயக்க வேண்டும் எனவும் அப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top