Close
செப்டம்பர் 20, 2024 3:50 காலை

நிதிநிலை அறிக்கையில் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு: ஏஐடியுசி வரவேற்பு

தஞ்சாவூர்

அரசு போக்குவரத்துக்கழக ஏஐடியுசி தொழிலாளர் சம்மேளனம்

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கியதை ஏஐடியுசி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சம்மேளனம்  வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி தொழிலாளர் சம்மேளன துணைத்தலைவர் துரை.மதிவாணன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித்துறை, அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்துதல், மகளிர் மேம்பாட்டு திட்டங்கள், இலவச பாடப் புத்தகங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிதிநிலை அறிவிப்புகள் வரவேற்கக்கூடியது.

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் பொழுது தனியாக நிதி ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து ஏஐடியூசி சார்பில் வலியுறுத் தப்பட்டு வந்தது. அந்த அடிப்படையில் இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் போக்குவரத்து கழகங்களுக்கு ரூ1,320 கோடி ரூபாய் நிதி வழங்கியது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகும்.

அதேபோல் மகளிர் இலவச பயண திட்டத்திற்கு இந்த ஆண்டு1520 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதையும் வரவேற் கிறோம்.  மகளிர் இலவச பயண திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அந்தந்த போக்குவரத்துக் கழகங்க ளுக்கு பெண்கள் இலவச பயணத்திற்கு ஆகும் செலவினங்கள், மற்றும் ஓட்டுனர் நடத்துனர் படித்தொகை உள்ளிட்ட செலவினங் களை ஈடுகட்டும் வகையில் போக்கு வரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் மூலம் அளிக்காமல், நேரடியாக வழங்கிட வேண்டும்.

அதேபோல் ஏறத்தாழ 2,213 நவீன டீசல் பேருந்துகளும், 500  பேருந்துகளும் கொள்முதல் செய்யப்படுவது வரவேற்கத் தக்கது.  தற்போது தமிழ்நாடு முழுவதும் தடத்தில் ஓடிக்கொண்டிருக்கின்ற பழைய பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் இயக்கப்படுவதற்கு முன்மாதிரியாக தற்போது கொள்முதல் செய்யப்படும் பேருந்துகளை விட கூடுதலாக இன்னும் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட வேண்டுமென வலியுறுத்துகிறோம்..

திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட போக்குவரத்துக் கழகம் தற்போது திமுக கட்சியின் தலைவரான முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஐம்பதாண்டு ஆண்டு பொன் விழா கண்டுள்ளது சிறப்பிற்குரியது.

தமிழ்நாட்டை ஆண்ட இரு முதல்வர்களும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் பொது மக்களின் சேவைக்காக இயக்கப்படும் சேவைத்துறை ஆகும் என்றும், அதற்கு ஆகும் செலவினங்கள் முழுவதையும் அரசே ஏற்கும் என்று சட்டமன்றத்தில் அறிவித்துள்ளனர். ஐம்பதாண்டு கால பொதுச்சேவையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தற்போது சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளது.  இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில். தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு மின் இழப்பு மற்றும் இலவச மின்சார மானியத்தொகை உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் 100% சதவீதம் அரசே ஏற்கிறது என்று அறிவித்தது.

அதைப்போல் அரசு போக்குவரத்து கழக கடன் மற்றும் செலவினங்கள் தொகை முழுவதையும் அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று இந்த நேரத்தில் வலியுறுத்துகிறோம். நிதிநிலை அறிக்கையில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஓய்வூதியர்கள் சுமார் 86 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களும் நிதிநிலையில் அறிவிப்பு வரும் என எதிர்பார்த்திருந்த அரசே பென்சனை ஏற்று நடத்தும் என்ற அறிவிப்பும், அகவிலைப்படி 76  மாத கால உயர்வு நிலுவையில் உள்ளதை அறிவித்து, ஓய்வூதியத்துடன் இணைப்பது , நிலுவைத் தொகை வழங்குவது என்ற அறிவிப்பும், இலவச மருத்துவ காப்பீட்டு திட்டஅறிவிப்பு, தொழிலாளர்களின் 14 வது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட எந்தவிதமான அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இல்லாதது ஏமாற்றமளிப்பதாக உள்ளது என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top