Close
செப்டம்பர் 20, 2024 5:53 காலை

அடித்தட்டு மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் கட்சி கோரிக்கை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் கோரிக்கை மனு அளித்த சிபிஎம் கட்சி எம்எல்ஏ சின்னத்துரை, மாவட்ட செயலர் கவிவர்மன்

அடித்தட்டு மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டுமென புதுக்கோட்டை ஆட்சியரிடம் சிபிஎம் கட்சி கோரிக்கை மனு அளித்துள்ளது.

ஏழை. ஏளிய அடித்தட்டு மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் ஆகியோர் அளித்துள்ள மனு விவரம்:

எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு ஆராம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் மற்றும் மருத்துவர் பற்றாக் குறையை சரிசெய்ய வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டு மனிதர்கள் வாழவே முடியாத அளவிற்கு பழுதடைந்துள்ள காலனி வீடுகளுக்குப் பதிலாக புதிய குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும். மணல் மாட்டுவண்டி குவாரிகள் அமைத்து மாட்டுவண்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.

காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டு வரும் சாமான்ய மக்களின் பக்கம் நின்று அவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வழிவகுக்க வேண்டும். திங்கள்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை களுக்கு உடனுக்குடன் தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக் குறையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இயற்கை வளங்களை அழிக்கும் விதமாக விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகளை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்குவதற்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும். கிராமங்கள் தோறும் பழுதடைந்துள்ள சாலைகளை செப்பணிட வேண்டும். நரிக்குறவர் காலனியில் வசித்துவரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும். வியாபாரிகள் கொள்ளையடிப்பதை அனுமதிக் காமல் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை முறைப்ப டுத்த வேண்டும்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன் கொடுமைகளை தடுத்து நிறுத்தும் வகையில் பொதுமக்க ளிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்த வேண்டும். புறம் போக்குகளில் குடியிருந்துவரும் ஏழை மக்களுக்கு மனைப்பட் டாவும், இலவச வீடும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top