Close
செப்டம்பர் 19, 2024 11:12 மணி

புதுக்கோட்டையில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட முறைசாராத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதுக்கோட்டையில் சிஐடியு  தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா தலைமை வகித்தர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மாநில துணைத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.கே.மகேந்திரன் கண்டன உரையாற்றினார். கேரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், பொருளாளர் எஸ்.பாலசுப்பரமணியன், கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சி.அன்புமணவாளன், அனைத்துப் போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ரெத்தினவேல் மற்றும் நிர்வாகிகள் சி.மாரிக்கண்ணு, வி.சரவணன், மணிமாறன், முத்தையா, மாரிமுத்து உள்ளிட்டோர் பேசினர்.

தொழிலாளர்களுக்கு ஆன்லைன் பதிவில் புதுப்பித்தல், கேட்பு மனுக்களைப் பெறுவதில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும். நல வாரிய அலுவலகங்களில் மனுக்களை சமர்ப்பித்தலை அனுமதிக்க வேண்டும். நிலுவையில் உள்ள மனுக்களை உடனடியாக பரிசீலித்து பணப்பயன்களை தாமதமின்றி வழங்க வேண்டும். விபத்து மரணங்களுக்கான இழப்பீட்டை ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top