Close
செப்டம்பர் 20, 2024 3:55 காலை

மருத்துவக் காப்பீட்டில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டுமென வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியர்கள்

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற பள்ளி-கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகள்: மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்திட வேண்டும். 70 வயதான ஓய்வூதியர்களுக்கு 10% ஓய்வூதியம் உயர்;த்தி வழங்க வேண்டும். 3% அகவிலைப்படியை உடன வழங்க வேண்டும். குடும்ப நல நிதியை உடனக்குடன் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதிய முறையே தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் இரா.சரவணன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் கா.ஜெயாலன் பேசினார்.

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஆர்.சுப்பிரமணி யன், ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சா.இளங்கோவன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக மாவட்ட துணைத் தலைவர் பி.மாரிமுத்து வரவேற்றார். பொருளாளர் நா.கிருஷ்ணன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top