Close
செப்டம்பர் 20, 2024 4:05 காலை

சீட்டு கமிஷனுக்கான ஜிஎஸ்டியை முழுமையாக ரத்து செய்ய சிட்பண்ட் நிறுவனங்கள் கோரிக்கை

புதுக்கோட்டை

சிட்பண்ட் சீட்டு கமிஷன் தொகைக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரிக்கை

சிட்பண்ட் நிறுவனங்கள் சீட்டுப் பிடித்து கிடைக்கும் கமிஷன் தொகைக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என சிட்பண்ட்ஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட சிட்பண்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் எஸ்.கே.ராமசாமி வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற 2,600 சிட்பண்ட்ஸ் நிறுவனங்கள் இந்த சங்கத்தில் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இதில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 40 சிட்பண்ட்ஸ் நிறுவனங்கள் உள்ளன. மாவட்டத்தில் மாதம் ரூ.60 கோடி வரை சீட்டு வசூல் நடக்கிறது.  இந்நிலையில் வாடிக்கையாளர் களிடம் இருந்து சீட்டு பிடிப்பதன் மூலம் நிறுவனத்துக்கு கிடைக்கக்கூடிய 5 சதவீத கமிஷன் தொகைக்கு ஜிஎஸ்டியை 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஜிஎஸ்டி உயர்வு வரும் 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
இந்த ஜிஎஸ்டி உயர்வால் இந்த வரிக்கான தொகையை சீட்டு போடும் வாடிக்கையாளர்கள் நிறுவனங்களுக்கு வழங்க மறுக்கின்றனர். ஜிஎஸ்டி காரணமாக பதிவு செய்யாமல் பல இடங்களில் சீட்டு நடத்தப்படுகிறது. இதனால் பதிவு செய்துள்ள பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு பெரும் இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டும் சிட்பண்ட் நிறுவனங்கள் மூலம் அரசுக்கு தொழில் வரி, வருமான வரி என பல்வேறு வரிகள் மூலம் ரூ.2,000 கோடி வருமானமாக கிடைக்கிறது. ஜிஎஸ்டி காரணமாக தொழில் பாதிக்கப்பட்டு இந்த வருவாய் பாதிக்கப்படும்.
வங்கிகள் வசூலிக்கும் வட்டிக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவ தில்லை. அதே போன்ற சேவையை தான் சிட்பண்ட்ஸ் நிறுவனங்களும் வழங்குகின்றன. தவிர சீட்டு பிடிக்கும் வங்கிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாத நிலையில் எங்களைப் போன்ற சிறிய சிட்பண்ட் நிறுவனங்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு இதனை கவனத்தில் கொண்டு சிட்பண்ட்ஸ் நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். எங்களது கோரிக்கை குறித்து மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவிக் கப்பட்டுள்ளது. பேட்டியின் பொழுது செயலாளர் சண்முகம் பொருளாளர்சுருதி மூர்த்தி உட்பட பலர் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top