Close
செப்டம்பர் 19, 2024 10:53 மணி

புதுக்கோட்டை  மேல ராஜவீதி நகர காவல்நிலையம் அருகே  காணா குண்டு விநாயகர்  கோயிலில் பாலாலயம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மேலராஜவீதி நகர காவல்நிலையம் அருகிலுள்ள காணா குண்டு விநாயகர் கோவிலில் நடந்த பாலாலயம்

புதுக்கோட்டை     மேலராஜவீதி நகர காவல்நிலையம் அருகிலுள்ள   காணா குண்டு   விநாயகர்  கோயிலில் பாலாலயம் சிறப்பாக  நடந்தது                                                                  புதுக்கோட்டை மேலராஜவீதி நகர காவல்நிலையம் அருகிலுள்ள  காணா குண்டு   விநாயகர் கோயில் பழமை வாய்ந்த கோயில்.  இந்த கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற உள்ளது. திருப்பணிகள் தொடங்கப்பட  உள்ளதை  முன்னிட்டு   பாலாலயம்   நடந்தது.

பாலாலயத்தை முன்னிட்டு சுப்பிரமணி குருக்கள், ரவி குருக்கள், ரவிச்சந்திரன் குருக்கள் முன்னிலையில் யாகபூஜை சிறப்பு ஹோமம் கலசபூஜை லெட்சுமி பூஜை         நடந்தது.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மேலராஜவீதி நகர காவல்நிலையம் அருகிலுள்ள காணா குண்டு விநாயகர் கோயிலில் நடந்த சிறப்பு யாகம்

இதில்,தேவஸ்தான அலுவலர்கள்   தஞ்சாவூர் துணை ஆணையர் சூரியநாராயணன்,  அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார்,    புதுக்கோட்டை நகர்மன்ற தலைவி திலகவதி செந்தில்,  செயல் அலுவலர் சந்திரசேகரன், ஆய்வர் செல்லப்பாண்டியன்.

ஆய்வாளர் புவனேஸ்வரி,   இளநிலை பொறியாளர் பாலசுப்பிரமணியன், ஆலய  மேற்பார்வையாளர் தெட்சிணா மூர்த்தி,  ஸபதி குமரிஆனந்தன், அனுமன் திருச்சபை ஆன்மிக நெறியாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் உபயதாரர்கள் பாலசுப்பிரமணியன், கணேஷ்குமார், பக்தர்கள்   உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top