Close
செப்டம்பர் 20, 2024 1:28 காலை

புதுக்கோட்டையில் விஸ்வகர்மா ஜயந்தி விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுக விஸ்வகர்மா சுவாமிக்கு நடைபெற்ற அபிஷேக ஆராதனை

புதுக்கோட்டையில்  விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு  அருள்மிகு பஞ்சமுக விஸ்வகர்மா சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை கீழ ஏழாம் வீதி  புவனேஸ்வரி அதிர்ஷ்டானத்தில் எழுந்தருளியுள்ள  பஞ்சமுக விஸ்வகர்மா சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும் அதன் பின் சாமிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும்  பஞ்சமுக விஸ்வகர்மா சுவாமியின் அருட் பிரசாதம் வழங்கப்பட்டது.

அதன் பின் மதியம் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அரியநாச்சி அம்மன் கோவிலில் அன்னதான விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாலையில் பஞ்சமுக விஸ்வகர்மா சுவாமி மலர்களாலும், பழங்களாலும் அலங்கரிக்கப்பட்டு குதிரை வாகனத்தில் நகரின் கீழராஜவீதி, மேல ராஜவீதி, வடக்கு ராஜ வீதி, தெற்கு ராஜவீதி முக்கிய வீதிகள வழியாக ஊர்வலமாக புறப்பட்டு பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருளாசி வழங்கி சிறப்பித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top