Close
செப்டம்பர் 20, 2024 5:51 காலை

புதுக்கோட்டை தண்டாயுதபாணி கோயிலில் கும்பாபிஷேகவிழா ஆலோசனை கூட்டம்

புதுககோட்டை

புதுக்கோட்டை தெற்கு நாலாம் வீதி தண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய தக்கார் செந்தில்குமார்

புதுக்கோட்டை ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகவிழா ஆலோசனை கூட்டம் நடந்தது.

புதுக்கோட்டை மேல ராஜ வீதி தெற்கு 4 -ஆம் வீதி சந்திப்பிலுள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் கும்பாபிஷேக விழா திருப்பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் திருப்பணிகளை விரைந்து முடிக்கவும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டத்தில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில் குமார், முன்னாள் தக்கார் வைரவன் மற்றும் திமுக நகரசெயலாளர் ஆ. செந்தில், கம்பன் கழகசெயலாளர் ஆர். சம்பத்குமார் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கோயில் நிர்வாகிகள், ஊழியர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக கும்பாபிஷேக திருப்பணி குழுஅமைக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் ஊழியர்கள் சிறப்புடன் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top