Close
செப்டம்பர் 20, 2024 3:54 காலை

திருவப்பூர் ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமிக்கு புரட்டாசி மாத சிறப்பு அலங்காரம்

புதுக்கோட்டை

திருவப்பூரில் நடைபெற்ற புரட்டாசி மாத அன்னப் பாவாடை அலங்கார நிகழ்ச்சி

புரட்டாசி மாத அன்னப் பாவாடை அலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை திருவப்பூர் சௌராஷ்டிரா சபைக்கு பாத்தியமான ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி,  விருந்தினர் மாளிகையில் திருமலை திருப்பதி  அருள்மிகு ஸ்ரீ வெங்கடாஜலபதி திருவுருவ அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கும் வைபவமும், அன்னப்பாவாடை அலங்காரமும்  நடைபெற்றது.

நிகழ்வுக்கு சௌராஷ்ட்ரா சபா தலைவர் அசோகன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சபா உறுப்பினர்கள் பரசுராமன், ஸ்ரீதர், ஜோதிபாசு, கிருஷ்ணன், ஓம்ராஜ், ராஜசேகரன், சௌராஷ்ட்ரா சமூக உறுப்பினர்கள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கண.மோகன்ராஜா, தங்கராஜா, செல்வரத்தினம், தனகோபால், குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் மாலை ஹரி ராம கீர்த்தனம் நிகழ்ச்சி பாலாஜி ஹரிமோகன் குழுவினர் சார்பாக நடைபெற்றது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top