Close
செப்டம்பர் 19, 2024 11:22 மணி

சோழவந்தான் அருகே தென்கரையில் சூரசம்ஹார விழா

மதுரை

சோழவந்தான் தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத மூல நாத சுவாமி கோயிலில் நடந்த சூரசம்ஹாரம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரையில் சூரசம்ஹார விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத மூல நாத சுவாமி திருக்கோவிலில் அருள் பாலிக்கும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி பதினோராம் ஆண்டு சூரசம்ஹார பெருவிழா கோயில் வளாகத்தின் முன்பாக நடைபெற்றது.

சூரசம்காரவிழா கடந்த எட்டாம் தேதி கணபதி ஹோமம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஐப்பசி 13 -ஆம் தேதி மாலை 3:30 மணி அளவில் வேல் வாங்கல் நிகழ்ச்சி நடைபெற்று முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்தார். அப்போது பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என்று பக்தி பெருக்குடன் கோஷமிட்டனர்.

தொடர்ந்து அதிர்வேட்டுக்கள் முழங்க தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் நடைபெற்றது. இதையடுத்து மாலை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாக அதிகாரி உள்ளிட்ட ஆலய பணியாளர்கள் மற்றும் பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top