Close
செப்டம்பர் 19, 2024 6:49 மணி

ஆதனக்கோட்டை காசி விஸ்வநாதர்- காசி விசாலாட்சியம்மன் ஆலய கார்த்திகை கடைசி சோமவார வழிபாடு

புதுக்கோட்டை

ஆதனக்கோட்டையில் நடைபெற்ற சங்காபிஷேக வளிபாடு

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை ஸ்ரீ காசி விஸ்வநாதர் உடனுறை ஸ்ரீ காசி விசாலாட்சியம்மன் ஆலய கார்த்திகை கடைசி சோமவாரத்தினை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

சோமவார விழாவில் 108 சங்காபிஷேகம் அனுக்கை விஷேச லோகஷேமார்த்த சங்கல்ப, கலச பூஜை, சங்கு பூஜை நடைபெற்று விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறவேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது. காசிவிஸ்வநாதருக்கு விஷேச அபிஷேகம் மற்றும் சங்காபிஷேகமும் தொடர்ந்து ஆராதனையும் விசாலாட்சியம்மனுக்கு விஷேச அபிஷேகமும் நடைபெற்றது.

விழா ஏற்படுகளை ஆன்மீகவாதி தமிழ்வாணன், பூஜைகளை வாராப்பூர் மகேஷ் குருக்களும், பெருங்களூர் ஞானஸ்கந்த குருக்கள் குருமூர்த்தி மற்றும் சீனி ஐயர் ஆகியோர் செய்திருந்தனர். சங்காபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top