Close
செப்டம்பர் 20, 2024 1:33 காலை

திருப்பாவை… பட்டுடன் எழுந்தருளிய திருவில்லிபுத்தூர் ஆண்டாள்

விருதுநகர்

சிறப்பு அலங்காரத்தில் திருவில்லிபுத்தூர் ஆண்டாள்

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி உற்சவம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு ஸ்ரீஆண்டாள் – ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகள் தங்கரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். பின்பு ஸ்ரீஆண்டாளுக்கு திருப்பாவை பாடல்கள், தங்க இழைகளால் நெய்யப்பட்டிருந்த பட்டு சாற்றப்பட்டு, குறடு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தனர்.

இந்த சிறப்பு தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் முத்துராஜா, கோவில் தக்கார் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top