Close
செப்டம்பர் 20, 2024 1:28 காலை

கார்த்திகை மாதத்தில் பழனி முருகனை தரிசித்த 11 லட்சம் பக்தர்கள்

பழனி

அருள்மிகு பழனிமுருகன்

பழனி முருகனை கார்த்திகை மாதம் மட்டும் 11 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்ட தகவல்: பழனி முருகன் கோவிலில் தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் மட்டும் அதாவது கடந்த நவம்பர் 17 -ஆம் தேதி முதல் டிசம்பர் 12 -ஆம் தேதி வரை 10 லட்சத்தி 84 ஆயிரத்து 242 பக்தர்கள் சுவாமி  தரிசனம் செய்துள்ளனர்.

மேலும் ரோப் கார் மூலம் ஒரு லட்சத்து 7,678 பேர்களும் மின் இழுவை ரயில் மூலம் ஒரு லட்சத்து 72,956 பேர் சென்றுள்ளனர். அன்னதானத்தில் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 542 பேர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

இலவச பஞ்சாமிர்தம் மூன்று லட்சத்து 97 ஆயிரத்து 125 பேர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மோர் மற்றும் சுக்கு காபி ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 500 பேர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கார்த்திகை மாதத்தில் உண்டியல், பஞ்சாமிர்தம் பிரசாதம், தங்கரதம், தங்கத் தொட்டில், தரிசன கட்டண சீட்டுகள் மூலம் 19 கோடியே 24 லட்சம் வருமானம் கிடைத் துள்ளது. இதில் பஞ்சாமிர்த மூலம் 8 கோடியே 58 லட்சத்து 3,710 கிடைத்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top