Close
செப்டம்பர் 19, 2024 11:20 மணி

பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் ஜன.12 ல் குண்டம் திருவிழா

கோபிச்செட்டிபாளையம்

கோபி அருகேயுள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன்

கோபிசெட்டிபாளையம் அருகே பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில்  ஆண்டு தோறும் ஜனவரி மாதம் குண்டம் மற்றும் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது.

கடந்த 2  ஆண்டுகளாக  கொரோனா தொற்று காரணமாக  கோவில் பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கினர். பக்தர்க ளுக்கு குண்டம் இறங்க அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் நிகழாண்டுக்கான  குண்டம் திருவிழா கடந்த மாதம் 29 -ஆம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. ஆண், பெண்கள் குண்டம் இறங்குவதற்காக மாலைஅணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.

இன்று அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சுவாமி யை தரிசனம் செய்தனர். 11-ஆம் தேதி பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து 12- ஆம்  தேதி முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா நடைபெறுகிறது.

இதையொட்டி அதிகாலை 5.30 மணி அளவில் கோயிலுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள 50 அடி குண்டத்தில் முதன் முதலாக தலைமை பூசாரி ஆனந்த்,  குண்டம் இறங்கி தொடங்கி வைப்பார். அதைத் தொடர்ந்து பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்குவார்கள்.

இதையொட்டி ஆங்காங்கே பக்தர்கள் வரிசையாக நின்று குண்டம் மிதிப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் 13 -ஆம்  தேதி மாலை 4 மணி அளவில் தேர் திருவிழா நடைபெறுகிறது. 14-ஆம் தேதி மலர் பல்லக்கு நடைபெற உள்ளது. அன்று இரவு 11 மணி அளவில் மலர் பல்லக்கானது பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு அம்மன் மலர் பல்லக்கில் கோபி பெருமாள் கோயிலை வந்து அடைகிறது.

அதைத் தொடர்ந்து 15-ஆம் தேதி கோபியில் தெப்ப உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 16 -ஆம் தேதி முதல் 21 -ஆம் தேதி வரை மஞ்சள் நீர் உற்சவம் நடைபெற உள்ளது. 21-ஆம்  தேதி சனிக்கிழமை மறுபூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

குண்டம் திருவிழாவையொட்டி குண்டத்துக்கு தேவையான விறகுகளை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top