Close
செப்டம்பர் 20, 2024 2:54 காலை

புதுக்கோட்டையில்    ஸ்ரீ பிரஹதாம்பாள் ஆராதனை விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற பிரஹதாம்பாள் இசை விழா

புதுக்கோட்டை  திருக்கோகர்ணம் அருள்மிகு  பிரஹதாம்பாள் கோகர்ணேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ பிரஹதாம்பாள் ஆராதனை விழா திருச்சி முன்னாள் மேயர்  சாரு பாலா தொண்டைமான் தலைமையில் நடைபெற்றது.

பிரஹதாம்பாள் ஆராதனை விழாவில்  பூஜாலயகண்ணன் குழுவினரின் வாய்ப்பாட்டு, பானுமதி சுப்பிரமணியனின் வாய்ப்பாட்டு, அருணா ராஜகோபாலின் கீபோர்டு,  ஸ்ரீ ஹரிமோகனின் பக்தி பாடல்கள், அகரம் அபிதேவகி சத்தியபாலன் இசை குடும்பத்தை சேர்ந்த நாராயணசாமி என்ற ரவீந்திரன் வீணை இசையுடன்  ஆராதனை விழாநடந்தது.

நிகழ்வில் அசத்திய சிறுவர்கள் சிறுமிகள், சிறுவன் கிருத்திக்ஹரிஷின் கிட்டார்  வாசிப்பும்    3 வயது சாய்சிவாவின் மிருதங்கம்  இசையும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.

புதுக்கோட்டை இசைக் கலைஞர்கள் தங்கள் இசை நிகழ்ச்சியை நடத்தினர்.  இசை கச்சேரியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு இசை  பள்ளி ஆசிரியர்களும் விழா குழுவினர் சிறப்பு செய்தனர்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் நடந்த பிரஹதாம்பாள் இசைவிழாவில் பங்கேற்ற இசை ஆர்வலர்கள்

விழாவில், தவத்திரு தயானந்த சந்திரசேகரன் ,  மூத்த  மருத்துவர் எஸ். ராமதாஸ், வீணை இசை கலைஞர்  சந்திரசேகர், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், சத்தியராம்ராமுகண்ணு,  அருட்பணி மருத்துவர் பி. ராமமூர்த்தி, கம்பன்கழக செயலர் ரா.சம்பத்குமார் பழனியப்பா நகர் முரளி மற்றும் சமூகஆர்வலர்கள் இசைவல்லுனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டாக்டர் ராமதாஸ் தலைமையில் பழனியப்பா நகர் முரளி, கல்லூரி பேராசிரியர் காயத்திரிதேவி  உள்ளிட்டோர்  செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top