Close
செப்டம்பர் 20, 2024 1:28 காலை

திருவப்பூர் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.9.13 லட்சம் காணிக்கை

புதுக்கோட்டை

புதுகை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் அறநிலையத்துறை உதவி ஆணையர் தி. அனிதா தலைமை.யில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணி

புதுக்கோட்டை திருக்கோயிலைச் சார்ந்த பிரசித்தி பெற்ற திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் உண்டியலில் ஒன்பது லட்சத்து 13 ஆயிரத்து 39 ரூபாய் ரொக்க பணமும், 134 கிராம் தங்கம், 480 கிராம் வெள்ளி, 13 வெளிநாட்டு டாலர்கள் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்.

புதுக்கோட்டை திருக்கோயிலைச் சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் நான்கு மாதங்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை கோயிலில் உள்ள நான்கு உண்டியல்கள் காணிக்கை என்னும் பணி நடைபெற்றது.

கோயில் வளாகத்தில் புதுக்கோட்டை அறநிலையத்துறை உதவி ஆணையர் தி.அனிதா முன்னிலையில் புதுக்கோட்டை ஆய்வாளர் திவ்யபாரதி, செயல் அலுவலர் முத்துராமன், ஆலயம் மேற்பார்வையாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் அரசு மன்னர் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர் கள் என 50- க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும்  பணியில் ஈடுபட்டனர்.

நான்கு உண்டியல்களிலும் உள்ள காணிக்கைகளை எண்ணியதில் ஒன்பது லட்சத்தி 13 ஆயிரத்து 39 ரூபாய் ரொக்க பணமும், 134 கிராம் தங்கம், 480 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு டாலர் (பணம்) ஆகியவற்றை உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

ரொக்க பணம் மற்றும் வெளிநாட்டு டாலர்களை வங்கியிலும் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.  வருகின்ற 26 -ஆம் தேதி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது.  திருவிழாவின்போது பக்தர்களின் காணிக்கைகளால் உண்டியலில் ஏற்படும் இட நெருக்கடியை தவிர்க்கும் வகையில் முன்னதாகவே   உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top