Close
செப்டம்பர் 20, 2024 3:48 காலை

மாசி மகத்துக்கு முழு வீச்சில் தயாராகி வரும் புதுகை பல்லவன் குளம்

புதுக்கோட்டை

மாசி மகத்துக்காக தெப்ப உற்சவம் நடைபெறவுள்ள பல்லவன் குளம்

புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் சாந்தநாதர் ஆலயம் மற்றும் பழைய அரண்மனை ஆகியவைகளுக்கு அருகே அமைந்துள்ள சுமார் 200 ஆண்டுகள் பழமையான பல்லவன் குளத்தில்   மாசி மகத்தை முன்னிட்டு நடைபெறும் தெப்ப உற்சவத்துக்கு முழு வீச்சில் தயாராகி வருகிறது.

புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட ராஜாராமச்சந்திரத் தொண்டைமான் ஆட்சி காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தான திவானாக இருந்த சேஷையாசாஸ்திரி 1883-84 –ம் ஆண்டில் புதுக்கோட்டை நகரில் இருந்த அனைத்துக் குளங்களும் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்தார்.

அதில் நகரின் மையப்பகுதியில் உள்ள பல்லவன்குளமும் தூர்வாரப்பட்டு அழகு படுத்தப்பட்டது. அப்போது இந்தக்குளத் துக்கு சிவகங்கை என திவான் பெயரிட்டார். எனினும், இன்று வரை பல்லவன் குளம் என்றுதான் அழைக்கப்படுகிறது.

புதுக்கோட்டை நகராட்சியிலுள்ள சுமார் 40 குளங்களில் சிவன் கோயில் அருகே அழகுற அமைந்திருப்பது இக்குளம் என்றால் மிகையில்லை. கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தீர்த்தமாடு வதும், முன்னோர்களுக்கு திதி கொடுக்க காசி, ராமேஸ்வரம் செல்ல இயலாதவர்கள் தங்கள் கடமைகளை இங்கு நிறை வேற்றுவதும் வழக்கம்.

புதுக்கோட்டை

இந்நிலையில் கடந்த ஆட்சிகாலத்தில்  நகராட்சி நிர்வாகம் இக்குளத்தை ரூ. 20  லட்சம் மதிப்பில் தூர் வாரப்பட்டது.  மழையால் தெப்பக்குளம் நிரம்பியுள்ளதால் வரும் திங்கள்கிழமை (6.3.2023)  அன்று மாசிமகத்தையொட்டி  தெப்ப உற்சவம் விமரிசையாக  நடத்துவதற்கு  வசதியாக இந்த தெப்பக்குளத்தின் சுற்றுச் சுவர்கள் வர்ணம் தீட்டும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

மேலும், குளத்தில்  மிதக்கும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பலவகைக் கழிவுகளும் அகற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக சிவன்கோயில் சந்நிதி அருகே உள்ள  பல்லவகுளம் வடக்குக்கரையில் படித்துறையும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. நகர் மன்றத்தலைவர் திலகவதி செந்தில் மேற்பார்வையில் நகராட்சி ஊழியர்கள் இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top