Close
செப்டம்பர் 20, 2024 3:58 காலை

திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜசுவாமி மாசிப் பிரம்மோற்சவ திருத்தேரோட்டம்

சென்னை

மாசி பிரம்மோற்சவ பெருவிழாவினையொட்டி நடைபெற்ற திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜசுவாமி கோயில் திருத்தேரோட்டம்.

திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜசுவாமி பிரம்மோற்சவ மாசிப் பெருவிழா வினையொட்டி திருத்தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

தமிழகத்தின் மிகப் பழமையா திருக்கோயில்களில் ஒன்றான திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜசுவாமி திருக்கோயில் தொண்டை மண்டலத்தில் அமைந் துள்ள 32 சிவஸ்தலங்களில் முதன்மையான தாகும். ஆண்டுதோறும் நடைபெறும்  பிரம்மோற்சவ மாசிப் பெருவிழா கடந்த பிப்.26, ஞாயிற்றுக்கிழமை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

தினமும் பல்வேறு வாகன பல்லக்குகளில் உற்சவர் சந்திரசேகரர் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.  கடந்த திங்கள்கிழமை சூரிய, சந்திர பிரபை, செவ்வாய்க்கிழமை பூத, சிம்ம வாகனம், புதன்கிழமை ரிஷப வாகனம், வியாழக்கிழமை அதிகார நந்தி, அஸ்தமானகிரி வாகனம், வெள்ளிக்கிழமை யானை வாகனம் உள்ளிட்டவைகளில் உலாவரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சி களில் ஒன்றான திருத்தேரோட்ட நிகழ்ச்சி சனிக்கி ழமை நடைபெற்றது.   காலை சுமார் 8.45 மணிக்குத் தொடங்கிய தேரோட்டத்தில் உற்சவர் ஸ்ரீ சந்திரசே கரர் உடனுறை திருபுரசுந்தரி அலங்கரிக்கப்பட்ட நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தேர் வெளியே கொண்டுவருவதற்கு முன்பு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  இதனைத் தொடர்ந்து நீண்ட வரிசையில் இருந்த பொதுமக்கள் வடம் பிடித்து இழுக்க தேர் படிப்படியாக நகரத் தொடங்கியது.

தேர்நிலையிலிருந்து புறப்பட்ட தேரோட்டம் சன்னதி தெருவில் இருந்து புறப்பட்டு திருவொற் றியூர் நெடுஞ்சாலை, தெற்கு, மேற்கு, வடக்கு மாட வீதிகள் வழியாக வந்து மீண்டும் திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சந்நிதி தெரு வழியாக சுமார் 2 மணியளவில் தேர் நிலையை அடைந்தது.

தேரோட்டம் நடைபெற்றதையொட்டி வீதியெங்கும் ஆங்காங்கு தண்ணீர், மோர், பழரசம், அன்னதானம் உள்ளிட்டவைகள் பொதுமக்கள் ஆங்காங்கு வழங்கியபடி இருந்தனர்.

தேரடியில் தொடங்கிய தேரோட்டம் சந்நிதி தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தெற்கு, மேற்கு, வடக்கு மாடவீதிகள் வழியாக மதியம் சுமார் 1 மணியளவில் தேர் நிலைக்குத் திரும்பியது.

விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான கல்யாணசுந்தரர்-திரிபுரசுந்தரி திருக்கல்யாணம் வரும் மார்ச் 6 திங்கள்கிழமை நடைபெற உள்ளது. திருவிழாவினையொட்டி திருவொற்றியூர் நகரத்தார் சங்கம் சார்பில் தடையில்லா அன்னதானம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ஜ.முல்லை, செயல் அலுவலர், உதவி ஆணையர் எம்.பாஸ்கரன் தலைமையில் அறநிலையத் துறை ஊழியர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்த னர்.

மேலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் காவல் உதவி ஆணையர் முகம்மது நாசர் மேற்பார்வையில் ஆய்வாளர் காதர் மீரா தலைமையில் இரு நூறுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top