Close
செப்டம்பர் 20, 2024 3:36 காலை

புதுகையில் வீர ஆஞ்ச நேயரை பார்க்க வந்த நடமாடும் ஆஞ்சநேயர்…!

புதுக்கோட்டை

புதுக்கோட்டை தெற்கு நான்காம் வீதிய ஆஞ்சநேயர் கோயிலுக்கு வந்த நடமாடும் ஆஞ்சநேயர்

புதுகையில் வீர ஆஞ்ச நேயரை பார்க்க வந்த நடமாடும் ஆஞ்சநேயரால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை தெற்கு நான்காம் வீதி மார்க்கெட் பகுதியிலுள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோயிலில் அனுமன் ஜயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அனுமன் திருச்சபை சார்பில் பல்வேறு வழிபாடுகள் இக்கோயிலில் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இக்கோயில் கருவரையில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஆஞ்சநேயரை மிகவும் அருகில் நின்று பார்ப்பதற்காக நடமாடும் ஆஞ்சநேயர் செவ்வாய்க்கிழமை காலை நேர பூஜைக்கு வருகை புரிந்தார். இந்தக் காட்சி பக்தர்களையும் பொதுமக்களையும் வியப்பில் ஆழ்த்தியது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top