Close
செப்டம்பர் 20, 2024 4:24 காலை

திருவப்பூர் மாரியம்மன் கோயிலுக்கு எவர்சில்வர் காணிக்கை உண்டியல் உபயம்

புதுக்கோட்டை

திருவப்பூர் மாரியம்மன் கோயிலுக்கு உபயமாக உண்டியல் வழங்கிய புதுக்கோட்டை வடக்கு காங்கிரஸ் கட்சி நகர தலைவர் கண்ணன்பாலு குடும்பத்தினர்

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலுக்கு  புதுக்கோட்டை வடக்கு காங்கிரஸ் கட்சி நகர தலைவர் கண்ணன்பாலு சார்பில் 5 அடி  உயரமுள்ள எவர் சில்வர்  உண்டியல் உபயமாக கோயில் நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டையில்  மிகவும் பிரசித்தி பெற்ற  திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசிப்பெருந்திருவிழா  விமரிசையாக நடந்து கடந்த 5 -ஆம் தேதி 21 -ஆம் தேதி நிறைவடைந்தது. திருவிழாவிற்கு புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதியில் இருந்தும் அதிக அளவில் பொதுமக்கள் வருவதால் கோவிலில் வைக்கப்பட்டுள்ள உண்டில்களில் பக்தர்கள் அதிகளவில் காணிக்கை செலுத்துவார்கள்.

இதனால் கோவிலில் உள்ள உண்டியல் பக்தர்கள் அதிக அளவில் காணிக்கை செலுத்துவதால் உண்டியல்களும் நிரம்பி வழியும் திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு இலவசமாக உண்டியல் வழங்கினால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதே பக்தர்களின் எண்ணமாகும்,.

இந்நிலையில்,  அந்த எண்ணத்தை நிறைவேற்றும் வகை யில்,புதுக்கோட்டை காங்கிரஸ் கட்சியின் வடக்கு நகரத் தலைவர் கண்ணன் பாலு, தனது சொந்த செலவில்,  5 அடி உயரம் உள்ள எவர்சில்வர் தகடுகளால் ஆன உண்டியல் செய்து முடித்தார்.

இந்த உண்டியலை,  அவருடைய குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து, கோயில் மேற்பார்வையாளர் ராஜ்குமாரிடம் வழங்கினர்.  இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மதன், வீரதுரைசிங்கம், கௌரி, குமரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top