Close
செப்டம்பர் 20, 2024 3:56 காலை

சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலய பூக்குழி விழா

மதுரை

சோழவந்தான் திரௌபதை அம்மன் கோவில் பூக்குழிதிருவிழா முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை மாவட்டம், சோழவந்தான் திரௌபதை அம்மன் கோவில் பூக்குழிதிருவிழா முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு திரௌபதை அம்மன் கோவில் பூக்குழி திருவிழா வருகிற 24 -ஆம் தேதி தொடங்கி, மே  5 -ஆம்  தேதி  வரை  நடைபெற உள்ளது.

இதற்கான முகூர்த்தக்கால் நடுவிழா, கோவில் முன்பாக நடந்தது. விழாவை முன்னிட்டு, கோவிலில் இருந்து முகூர்த்தக்கால் கம்பம் மேளதாளத்துடன் எடுத்து வந்து கோவில் முன்பாக  பூஜைகள் செய்து திருவிழா முகூர்த்தக் கால் கம்பம்  நட்டு வைத்தனர்.

தொடர்ந்து, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.இதில், பரம்பரை அறங்காவலர்கள், செயல் அலுவலர், கோவில் பணியாளர்கள் மற்றும் உபயதார்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top