Close
செப்டம்பர் 20, 2024 4:03 காலை

மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலம்.. மே 5 ல் வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர்

மதுரை

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாக்கள் உலகப் புகழ்பெற்றவை. இதில் மீனாட்சி அம்மன் கோயிலில்  ஏப்.23-ல் காலை 10-30 முதல் 11.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது.

மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாக்கள் உலகப் புகழ் பெற்றதாகும். சைவத்தையும், வைணவத்தையும் இணைக்கும் விழாக்களாக சித்திரைத் திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.

மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற கொடியேற்றம்

அதனையொட்டி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.23-ம் தேதி (சித்திரை மாதம் 10-ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மே 4-ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது.

கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியுள்ள நிலையில்,  தினமும் காலை, மாலை என இருவேளை சுவாமி புறப்பாடு மாசி வீதிகளில் நடைபெறும். முக்கிய விழாக்களான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ஏப்.30 -ல் நடைபெறும். மே 1-ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திக் விஜயம் நடைபெறும்.

முக்கிய நிகழ்ச்சியான மே 2 -ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர்  திருக்கல்யாணம் காலை 8.35 மணிமுதல் 8.59 மணிக்குள் நடைபெறுகிறது.

மதுரை
மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி வேடமணிந்த சிறுமி

அடுத்த நாள் மே 3-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். பொதுமக்கள் திருக்கல்யாணத்தை காணும் வகையில் 20 இடங்களில் எல்இடி திரை மூலம் ஒளிபரப்பப்படவுள்ளன. மே 4-ம் தேதியுடன் சித்திரைத் திருவிழா நிறைவு பெறும். முக்கிய விழாவான மே 5-ஆம் தேதி சித்திரை பௌர்ணமியன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறு கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top