Close
செப்டம்பர் 20, 2024 1:29 காலை

கோபி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா

ஈரோடு

கோபி அருகே நடைபெற்ற வாய்க்கால் ரோடு சந்தியா வந்தனதுறையில் ஸ்ரீ அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், வாய்க்கால் ரோடு சந்தியா வந்தனதுறையில் ஸ்ரீ அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

நான்கு கால பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தேறியது. பின்னர் யாகசாலையிலிருந்து புனிதநீர் குடம் சுமந்து கோவிலை வலம் வந்தனர். கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றிகும்பாபிஷேகம் செய்தனர். இதையடுத்து பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது.

இதன்பின் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேஷனல் பள்ளி நிறுவனர் டாக்டர் கே எஸ் ஸ்ரீதர், கே. எம். கைலாசம், திருப்பணி குழு தலைவர் சீனு (எ) வெங்கடசுப்பிரமணியம் மற்றும் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து அன்னதானத்தில் பங்கேற்றுச் சென்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top