Close
செப்டம்பர் 19, 2024 11:11 மணி

ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீ நரசிம்மர்  ஜயந்தி விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற நரசிம்மர் ஜயந்தி விழா

புதுக்கோட்டை அனுமன் திருச்சபை சார்பில்  ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீ நரசிம்மர்  ஜயந்தி விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி மார்க்கெட் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் திருச்சபை சார்பில்  நரசிம்ம ஜெயந்தி வைபவ பூஜை சிறப்பாக நடைபெற்றது. நரசிம்மர், லெட்சுமிநரசிம்மர்  மலர்  அலங்காரம் செய்யப்பட்டு இளநீர், நொங்கு மற்றும் பழங்கள் வைத்து பூஜைகள்  நடந்தது.

பின்னர் கே.மணிகுருக்கள் தலைமையில் மகா  தீபாராதனை நடைபெற்றது.மகா விஷ்ணுவின் தசாவதாரங்களில் 4 -ஆவது அவதாரம் தான் நரசிம்ம அவதாரம். பக்தி சொற்பழிவு   இசை கச்சேரியும்  நடந்தன. நிகழ்ச்சியில் பக்தர்கள்  கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை  அனுமன் திருச்சபை யினர் ஆன்மிக நெறியாளர் ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில்,  ஆன்மீக அன்பர் உள்பட  திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் இளநீர், நொங்கு மற்றும் பழங்கள் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது .

புதுக்கோட்டை
நரசிம்மர் ஜயந்தி விழாவில் பங்கேற்ற பக்தர்கள்

ஸ்ரீ நரசிம்மர்  ஜயந்தி பற்றி  கே.மணிகுருக்கள்  கூறியதாவது:  நிறைய பேருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள முயற்சியும் செய்வார்கள்.

ஆனால் அவர்களை சுற்றியுள்ளவர்கள், அவர்களுடைய ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள், இன்னும் ஒரு படி மேலே சொல்லப் போனால் அவர்களுடைய விதி, அவர்களுடைய தலை எழுத்து, அவர்களை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டே இருக்கும்.

எவ்வளவோ முயற்சிகளை எடுத்தாலும் அது தோல்வியில் முடியும்.முயற்சிக்கும் முட்டுக்கட்டை போடும் அந்த விதியைக் கூட மாற்றக்கூடிய சக்தி இந்த நரசிம்மர் வழிபாட்டிற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. நரசிம்மரை இந்த முறையில் தினம்தோறும் வழிபாடு செய்தால் மனம் உறுதி பெறும்.

வேண்டுதல் வைத்தவர் வாழ்க்கையில் தோல்வியே இருக்காது. உண்மையான பக்தியோடு இருந்த பிரஹலாதன், கூப்பிட்ட குரலுக்கு வந்து அருள் புரிந்தவர் தான் இந்த நரசிம்மர்.உண்மையான பக்தியோடு நரசிம்மரை வழிபாடு செய்பவர்களை, இந்த பகவான் எந்த நாளிலும் கைவிட்டதே இல்லை.

உங்களுடைய முயற்சியில் அடுத்தடுத்து தடைகள் வந்து கொண்டே இருந்தால், உக்கிரமாக இருக்கக்கூடிய லட்சுமி நரசிம்மரை வீட்டில் இருந்தபடியே வழிபாடு செய்யலாம், நரசிம்மரை மனதார நினைத்து மனதிற்குள் வேண்டி, உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தடைகள் நீங்க வேண்டும் என்று ‘ஓம் உக்கிர நரசிம்மாய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும்.

இந்த மந்திரத்தை சொல்லி உக்கிரம் நரசிம்மரை மனதார நினைத்து வழிபடுபவர்களுக்கு மன உறுதி அதிகரிக்கும். மன பயம் நீங்கும். எடுத்த காரியத்தில் உள்ள தடைகள் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். உங்களை அறியாமலே நீங்கள் தைரியசாலியாக மாறுவதை உணர்வீர்கள்.

எந்த வேண்டுதலாக இருந்தாலும் உண்மையோடு, மன உறுதியோடு செய்யும் பட்சத்தில் அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் பலன் இரட்டிப்பாகும் என்றும்  கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top