Close
செப்டம்பர் 20, 2024 5:37 காலை

புதுக்கோட்டை பிரசன்ன வெங்கடாசலபதி  கோயிலில் திருக்கல்யாண வைபவம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை கீ ழ 3 -ஆம் வீதியில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் திருக்கல்யாண வைபவம் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை கீ ழ  3 -ஆம் வீதியில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி  கோயிலில் திருக்கல்யாண வைபவம்  விமரிசையாக நடைபெற்றது.

புதுக்கோட்டை  கீ ழ  3 -ஆம் வீதி ஐயர்குளம்   கரையில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி  கோயிலில் திருக்கல்யாண வைபவ விழாவை  முன்னிட்டு  கோவிலில் மூலவர் ஸ்ரீ பிரசன்ன  வெங்கடாசலபதி சுவாமிக்கும் ஆஞ்சிநேயருக்கும், பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம்,  இளநீர் சந்தனம், மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரத்தில்  தீபாராதனை  நடந்தது.

புதுக்கோட்டை
பிரச்சன்ன வெங்டாஜலபதி திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்ற பக்தர்கள்

பின்னர்  மாலையில்  ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி ஸ்ரீ தேவி பூதேவி   திருக்கல்யாணம் வைபவம்  ஸ்ரீனிவாசன்    ரவிக்குருக்கள்  குணசீலன் முன்னிலையில் சிறப்புடன்  நடந்தது. பக்தர்கள்  அனைவரும்  சுவாமியை   வழிபட்டனர்.

பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை,    ஆன்மிக அன்பர்கள்    செய்திருந்தனர். முன்னதாக பெண்கள் வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க சீர்வரிசை எடுத்து வந்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top