Close
செப்டம்பர் 20, 2024 5:52 காலை

விநாயகர் சதுர்த்தி… ஆந்திராவிலிருந்து புதுக்கோட்டைக்கு வந்த விநாயகர் சிலைகள்..

புதுக்கோட்டை

புதுக்கோட்டைக்கு ஆந்திராவில் இருந்து வந்த விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 5  அடி முதல் 10 அடி உயரம் வரை பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் ஆந்திர மாநிலத்திலிருந்து இந்து முன்னணி சார்பில்  புதுக்கோட் டைக்கு  கொண்டு வரப்பட்டுள்ளது.

வருகின்ற   18 .9.2023-ம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.குறிப்பாக தமிழ்நாட்டிலும் விமரிசையாகக் கொண்டாப்பட்டு வருகிறது.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில்  ஆந்திர மாநிலத்திலிருந்து  புதுக்கோட்டை மாவட்டத்துக்கு 67 விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில், 48  விநாயகர் சிலைகள் புதுக்கோட்டை நகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட வுள்ளதாக இந்து முன்னணி  மாவட்டத்தலைவர் வடிவேலு, செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  மாவட்டத்தின்  பல்வேறு பகுதிகளில் காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.  பின்னர் மூன்று நாட்களுக்குப் பிறகு  விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று மாவட்ட நிர்வாகத்தில் வழிகாட்டுதல்களுடன்  நீர் நிலைகளில்  கரைக்கப்பட உள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக  ஆந்திரா, ராஜஸ்தான், கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து அரை அடி முதல் 10 அடி உயரம் வரை பல வண்ணங்களில்  உருவாக்கப்பட்டுள்ள 500 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் புதுக்கோட்டைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த விநாயகர் சிலைகள் நீர்நிலைகளின் கரைக்கும் பொழுது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையிலும் மரவள்ளிக்கிழங்கு மாவு மற்றும் காகித கூழ்களால் செய்யப்பட்ட இந்த விநாயகர் சிலை 50 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை விநாயகர் சிலை விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top