Close
ஜூலை 4, 2024 4:19 மணி

நவராத்திரி விழா… கடைகளில் குவிந்த பல வண்ண பொம்மைகள்..!

புதுக்கோட்டை

புதுகை ஜிடிஎன் பூஜை பொருள்கள் கடையில் விற்பனைக்கு வைத்துள்ள கொலு பொம்மைகள்

நவராத்திரி விழாவையொட்டி புதுக்கோட்டை நகரில்  உள்ள கடைகளில் பல வண்ண பொம்மைகள் குவிந்துள்ளன.
புதுக்கோட்டை நகரில் சாந்த நாதர் சுவாமி ஆலயம் அருகில் வண்ண வண்ண  வடிவமைப்பில் சிறியது முதல் பெரியது வரை  விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, சரஸ்வதி, லட்சுமி, மாரியம்மன், மதுரை மீனாட்சி, காமாட்சி, கிருஷ்ணர்,  ராதை ,கண்ணன், ஆஞ்சநேயர்.
மற்றும் எம்ஜிஆர், கருணாநிதி, பேரறிஞர் அண்ணா, காமராஜர், காந்தி, அப்துல்கலாம்  போன்ற  தலைவர்களு டைய  உருவ பொம்மைகள்   மற்றும் திருமண செட்,  கோவில் குளங்கள் பாடசாலை,  கொலு பொம்மை செட்டுகள், பொம்மைகளும் ஜிடிஎன். பூஜை பொருட்கள் விற்பனை நிலையத்தில்  விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்  நவராத்திரி விழா  வீடுகள்  கோவில்களில் சனிக்கிழமை தொடங்கி 9 நாள்கள்  நடைபெற இருக்கின்ற நிலையில் கொலு பொம்மைகள் விற்பனை சூடு பிடித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top