Close
அக்டோபர் 5, 2024 7:04 மணி

திருக்கார்த்திகை… புதுக்கோட்டையில் களை கட்டிய அகல்விளக்குகள் விற்பனை…

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோவிலின் அருகிலுள்ள ஜி. டி. என். பூஜை பொருட்கள் கடையில் தொடங்கிய அகல் விளக்குகள் விற்பனை

புதுக்கோட்டையில் திருக்கார்த்திகை தீபத்தை யொட்டி  அகல்விளக்குகள்   விற்பனை களைகட்டியது.

கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி வீடுகளின் வாசலில் மாலை நேரத்தில் பெண்கள் தீப விளக்குகள் ஏற்றி வருகிறார்கள். திருக்கார்த்திகை தீப விழா வருகிற 26- ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை ) கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் அனைவரும் வீடுகள் முழுவதும் அகல்விளக்கு தீபம் ஏற்றுவார்கள். கார்த்திகை தீப திருநாள் முன்னிட்டு கார்த்திகை சுட்டி விளக்குகள் புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி ஆலயம் அருகில் உள்ள ஜிடிஎன். பூஜை பொருள்கள் விற்பனை நிறுவனத்தில் சிறிய விளக்குகள் முதல் பெரிய விளக்குகள் வரை பல்வேறு வடிவமைப்புகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது ஏராளமான பெண்கள் வாடிக்கையாளர்கள் விளக்குகளை வாங்கி செல்கின்றனர்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் விற்பனைக்கு வந்துள்ள பல வகையான அகல் விளக்குகள்

பல வித வண்ணங்களில் விதவிதமான வகையில் அகல் விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. நகரில் பல்வேறு இடங்களில் அகல்விளக்குகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. அகல் விளக்குகள் பலவித வண்ணங்களில் ரூ.10 முதல் ரூ.50  ரூ.100 ரூ. 200    வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கார்த்திகை தீப விழாவை யொட்டி அகல் விளக்குகளை பெண்கள் ஆர்வமாக வாங்கி செல்கிறார்கள். பல்வேறு வண்ண வடிவிலான அகல்விளக்குகள் பொதுமக்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top