Close
ஜூலை 8, 2024 1:01 மணி

புதுக்கோட்டை வசந்த விநாயகர் ஆலயத்தில் துர்க்கை அம்மனுக்கு முதலாம் ஆண்டு திருவிளக்கு பூஜை

புதுக்கோட்டை

வசந்தபுரி வசந்த விநாயகர் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை

புதுக்கோட்டை வசந்த விநாயகர் ஆலயத்தில் துர்க்கை அம்மனுக்கு முதலாம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

புதுக்கோட்டை வசந்தபுரி நகர் வசந்தவிநாயகர் ஆலயத்தில் துர்க்கை அம்மனுக்கு முதலாம் ஆண்டு திருவிளக்கு பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.   முன்னதாக துர்கை அம்மனுக்கும் வசந்த விநாயகருக்கும்    முருகப்பெருமானுக் கும் பல்வேறு அபிஷேகங்கள் சந்தனக்காப்பு அலங்காரங்கள் மகா தீபாரதனை நடைபெற்றது.

ஆலயத்தின் வளாகத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பல்வேறு பகுதிகளில் இருந்து  ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜைகள் சந்தோஷ்அய்யர், பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினை வசந்தபுரி நகர் நல சங்க நிர்வாகிகள் நடராஜன், ஆறுமுகம், ஆர்.ஆர். சுப்பு, பழனிவேல் உள்ளிட்டோர்  சிறப்பாக நடத்தினர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top