Close
ஜூலை 4, 2024 3:40 மணி

புதுக்கோட்டை நகரில் கீழ நான்காம் வீதி முத்துமாரியம்கோயிலில் பூச்சொரிதல் விழா

புதுக்கோட்டை

சிறப்பு அலங்காரத்தில் புதுகை கீழ 4-ஆம் வீதியிலுள்ள முத்துமாரியம்மன்

புதுக்கோட்டை நகரில் கீழ நான்காம் வீதி தென்புறம் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை நகரில் கீழ நான்காம் வீதி தென்புறம் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காலையில்  பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபட்டனர்.

பின்னர் ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு பால் அபிஷேகம் சிறப்புடன் நடைபெற்றது மாலையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் சந்தன காப்பு, மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.  பின்னர் பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பூக்கள்  அம்மனுக்கு  சார்த்தப்பட்டது.  நிகழ்வினை மணிகண்டன் மற்றும் பாலசுப்ரமணியன் குருக்கள், ஆலய நிர்வாகிகள், விழா குழுவினர் செய்தனர். முன்னதாக மதியம் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அன்னதானத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top