Close
செப்டம்பர் 20, 2024 4:43 மணி

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது தெரியுமா..?

பெருமாள்

நமது முன்னோர்கள் புரட்டாசி மாதத்தை தெய்வத்திற்கு உரிய மாதமாக பார்க்கிறார்கள்.

பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி என்பதால் அசைவ உணவுகளுக்கு இடம் இருக்காது. மாறாக சைவ உணவுகளை தான் மாதம் முழுவதும் சாப்பிட வேண்டும்.

பெருமாளை வழிபாடு செய்வதால் வீட்டிலுள்ள கஷ்டங்கள் நீங்கி, மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும் என்று இன்றளவும் நம்பப்படுகின்றது. இந்த சாஸ்திரத்தை காலங்காலமாக இந்துக்கள் பின்பற்றி வருகிறார்கள். இதற்கு சாஸ்திர ரீதியாக காரணம் இருப்பது போல் அறிவியல் ரீதியான காரணமும் இருக்கிறது.

அந்த வகையில் புரட்டாசி மாதம் அசைவ உணவுகளை தவிர்ப்பதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? தெரிஞ்சிக்கலாமா?

பொதுவாக புரட்டாசி மாதத்தில் கோயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். புரட்டாசி தெய்வத்துக்கு உரிய மாதம் என்பதால் பக்தர்கள் கூட்டம் கோயிகளில் அதிகமாக இருக்கும். அதே போல காய்கறி கடைகளிலும் கூட்டம் அலைமோதும். அதே சமயம் அசைவ விற்பனை நிலையங்களில் கூட்டம் இருக்காது.

பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் வீடுகள் முழுவதும் பெருக்கி, சுத்தமாக இருக்கும். புரட்டாசி மாதம் காலை முதல் மாலை வரை வெயில் சூடு தாங்க முடியாத அளவுக்கு இருக்கும். அதே போல் மாலை மற்றும் இரவு வேளைகளில் குளிர் நம்மை உறைய வைக்கும்.

இப்படி மழை, வெயில் என்ற இரண்டு காலநிலையும் மாறி மாறி வருவதால் உடல்நிலையில் மாற்றம் ஏற்படும். இதனால் மனிதர்களுக்கு பாதிப்புகள் ஏற்படலாம். மனிதர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்களோ, அதே போல் விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன. அத்துடன் புரட்டாசி மாதத்தில் தொற்றுகள் வருவதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது. மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கு நோய்கள் வரும்.

இந்த காலநிலை மாற்றம் இருக்கும் காலகட்டத்தில் அசைவ உணவுகள் சாப்பிட்டால் செரிமான கோளாறு, நோய் தொற்றுகளின் தாக்கம் ஏற்படலாம். இதனால் தான் புரட்டாசி மாதம் அசைவ உணவுகளை தவிர்க்கவேண்டும் என்று நமது முன்னோர் புரட்டாசி மாதத்தை கட்டுப்பாடான மாதமாக மாற்றி வைத்துள்ளனர்.

சூட்டை கிளப்பிவிடும் காலம்

புரட்டாசி மாதத்தை ‘சூட்டை கிளப்பிவிடும் காலம்’ என்றும் சொல்லலாம். இந்த காலமானது, வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி, உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சினையை ஏற்படுத்தும்.

சாஸ்திரம் என்ன சொல்லுது?

புரட்டாசி மாதத்தில், புதனை ஆளும் சுக்கிரன் கன்னி ராசிக்கு மாறுவார். புதனின் நட்பு கிரகம் சனிபகவான் என்பதாலும் புதன் மகா விஷ்ணுவின் சொரூபம் என்பதாலும் புதன் பெருமாளுக்கு உரிய கிரகமாக பார்க்கப்படுகின்றது. அத்துடன் புதன் கிரகம் ஒரு சைவ கிரகமாக பார்க்கப்படுகின்றது. அவர் ஆளும் இந்த காலப்பகுதியில் அசைவ உணவுகள் சாப்பிடக் கூடாது என்றும் கூறப்படுகின்றது.

துளசி தீர்த்தம் குடிப்பது ஏன்?

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதம் என்பதால் கோயில்களில் பெருமாளுக்கு அதிகமான பூஜைகள் செய்வது வழக்கம். அப்போது துளசி தீர்த்தம் கோயில்களில் வழங்கப்படும். அதே போல் துளசி தீர்த்தம் வாங்கி குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் மற்றும் தொற்றுகள் வராமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top