சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் சௌந்திரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரர் சுவாமி கோயில் வைகாசி விசாகத்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்குள்பட்ட இக்கோயிலில், வெள்ளிக்கிழமை 7 மணிக்கு அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சனிக்கிழமை காலை 11 மணியளவில் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு வைகாசி விசாக திருவிழா தொடங்கியது. அன்று இரவு சுவாமி, அம்பாளுடன் காமதேனு, வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வருவார்.
10 நாள்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 10 மணிக்கு சுவாமி புறப் பாடு நடைபெறும். தினமும் இரவு 7 மணிக்கு சுவாமி. அம்பாளுடன் அன்னம், கிளி, ரிஷபம், யானை, சிம்மம், குதிரை வாகனத்தில் வீதி உலா காட்சி நடைபெறும்..
திருவிழாவின் ஒன்பதாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (8.6.2025) அதிகாலை 4 முதல் 5 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட தேரில் பிரியாவிடையுடன் சுவாமி. சவுந்திரநாயகி தேரிலும், சப்பரத்தில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் எழுத்தருள்வர். தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதையடுத்து காலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். பத்தாம் நாளான திங்கள்கிழமை (9.6.2025) தெப்பஉற்சவம், ஸப்தாவரண பூஜைகளுடன் வைகாசி விசாக திருவிழா நிறைவு பெறும்.